வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கட்சிக்கொடிகள்

கோவை, நவம்பர் 1: புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட காந்திபுரம் மேம்பாலத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கய அமைச்சர்கள் இன்று கோவை வருகின்றனர். இதனால், நகரின் அனைத்து சாலைகளும் கட்சி விளம்பர பேனர்களால் நிரப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, அவினாசி சாலையின் இருபுறமும் கட்சி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதோடு, சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் ஆயிரக்கணக்கான கட்சிக் கொடிகளும் கட்டிவைக்கப்படுள்ளன.



சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் உள்ள சிறிய ஓட்டை வழியாக மரக்கட்டையை நுழைத்து, அதில் கட்சி கொடியைக் கட்டிவைத்துள்ளனர். இந்த மரக்கடைகள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையின் நடுவே நீட்டி கொண்டிருப்பதால் வாகன விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் இந்த மரக்கட்டைகளை ஒட்டிச் செல்லும்போது மிகவும் கவனமாக சாலையைக் கடக்க வேண்டியுள்ளது.



கட்சிக்கொடி கட்டிவைக்கப்பட்டுள்ள ஓர் மரக்கட்டையில் இடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கல்லூரி மாணவர் பிரசாத் கூறியதாவது, 'நான்கு சக்கர வாகனங்கள் அருகில் வந்ததால், என்னுடைய இரு சக்கர வாகனத்தை சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை ஒட்டி நகர்த்தினேன். எதிர்பாராத விதமாக தடுப்புகளில் நுழைக்கப்பட்டுள்ள மரக்கட்டை ஒன்றில் இடித்து எனது வாகனம் நிலை குலைந்தது. மிதமான வேகத்தில் வந்ததால் வாகனத்தை கட்டுப்படுத்தி உயிர் தப்பினேன். சாலையின் ஓரத்தில் மரக்கடைகள் நீட்டிகொண்டிருப்பதால் வாகனத்தை ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் கட்சிக்கொடிகளும், விளம்பர பேனர்களும் வைக்கப்படுவதால் சாலைகளின் அளவே குறைந்து விடுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகின்றது. ஆபத்தான வகையில் கட்டப்படும் கொடிகளால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. மக்களை காப்பாற்ற வேண்டிய அரசே, மக்களுக்கு இடையூறாக செயல்படுவது வேதனையளிக்கிறது.' என்றார்.



சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் ஆபத்தான வகையில் கட்டப்படும் கட்சிக்கொடிகளில் பல காற்றின் வேகத்தால் சாய்ந்து சாலையின் நடுவே விழிந்து விடுகின்றன. நகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்பான லட்சுமி மில்ஸ் சந்திப்பில் சாலையின் நடுவே சாய்ந்து விழுந்துள்ள கட்சிக்கொடி வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்திவருகின்றது. 

இதுகுறித்து கோவை நுகர்வோர் தன்னார்வ அமைப்பின் செயலர் கே.கதிர்மதியோன் கூறியதாவது, 'செடிகளால் அமைக்கபட்டிருந்த மண் தடுப்புகளில் கொடிகள் ஊன்றப்படுவதால் தான் தற்போது இருக்கின்ற கான்க்ரேட் தடுப்புகள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டன. சிறிய ஓட்டை வழியாக, இதிலும் கொடிகள் கட்டத் தொடங்கிவிட்டனர். இவ்வாறு கட்சிக்கொடிகள் கட்டுவதற்கு முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது தெரியவில்லை. காரணம், சாலை தடுப்புகளில் கொடிகள் கட்டக்கூடாது என்பது அரசின் விதி. சாலைகள் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தாலும், விதிகளை மீறி போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அனுமதியுள்ளது. அரசியல் காரணங்களால் இதுபோன்ற விதிமீறல்கள் தட்டிகேட்கப்படுவதில்லை.' என்றார்.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...