சாலைகளில் குவியும் மணலால் கோவையில் வாகன ஓட்டிகள் அவதி


கோவை, நவம்பர் 1: கோவை - மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும் என்.எச்.67 சாலையானது 36 கி.மீ தூரம் கொண்டது. மலைகளின் ராணி என்றழைக்கப்படும் உதகைக்கு செல்லும் ஒரே வழியான இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். நாள்தோறும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையில் வந்து செல்கின்றன. 

மேலும், மேட்டுப்பாளையம் மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்களது பணிக்காக, இருசக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் கோவை நகரின் மத்தியப் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்கள் சாலைகளில் தேங்கிக் கிடக்கும் மணல்களினால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருக்கும் போது, காற்று வேகமாக வீசுவதால், அவர்களது  கண்களில் மணல் துகள்கள் விழுந்து, விபத்துகளும் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றன. 

இதேபோல,  அவினாசி சாலையில் (என்.எச்.67) வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளும் இதே இன்னல்களை எதிர்கொள்கின்றனர். 

இது தொடர்பாக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் கார்த்திக் என்பவர் கூறுகையில், நான் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் போதும், மணல் துகள்கள் தன் முகம் மீது விழுகிறது. காரணம், சாலையின் ஓரங்களில் மணல்கள் குவிந்து கிடப்பதே ஆகும். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக சாலையில் கிடக்கும் மணல்துகள்களை துப்புறவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்துவதை பார்த்துள்ளேன். ஆனால், தற்போது, அந்தப் பணிகளை காணமுடிவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

இதனிடையே, மேட்டுப்பாளையம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப்பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால், விரிவாக்கப் பணிகளால் சாலைகளில் உருவாகும், மணல் திட்டுக்களால் கடும் அவதிக்குள்ளாவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். 

இது தொடர்பாக தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த பொதுமருத்துவர் மதிவாணன் பேசுகையில், நமது, நவீன வாழ்க்கையில் வாழ்ந்து வருபவர்களுக்கு தூசுகளால் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சாலைகளில் கிடக்கும் மணல்களினால், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள், முகத்தில் முகமூடி அணிந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...