விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் --- சந்தை மதிப்பை வழங்கக் கோரி மனு

கோவை, நவம்பர் 6: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சந்தை மதிப்புத் தொகையினை வழங்கக் கோரி சின்னியம்பாளையம் ஜி.கே.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று  மனு அளித்தனர்.



அந்த மனுவில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நில ஆர்ஜிதம் செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால் ஏற்கனவே நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.

இந்நிலையில் தற்போது, 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் உள்ள பகுதியில் எந்த அறிவிப்பும் இன்றி நில எடுப்பு செய்வதற்கான பணிகளை விமான நிலைய நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஆர்ஜிதம் செய்யும் நிலத்திற்கு சதுர அடிக்கு 1500 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அந்த இடத்தின் சந்தை மதிப்பு 5000 முதல் 8000 ரூபாய் வரை உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் குறைந்த தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது முறையற்றது. மேலும், சில இடைத்தரகர்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...