பிரச்சனைகளை பேச கமல் அறிமுகம் செய்த செயலி 'மய்யம் விசில்'

பிரச்னைகளைப் பற்றிப் பேச கமல்ஹாசன் மய்யம் விசில் (maiamwhistle) என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.

கமல்ஹாசனின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் நற்பணி மன்றம் சார்பில் புதிய செயலி அறிமுக விழா நடைபெற்றது.  இந்த விழாவில் பேசிய கமல், “மக்கள் பிரச்னைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். நான் சுற்றுப்பயணம் செய்து கொள்வது கற்றுக் கொள்வதற்காகத் தான். நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு. நல்லது செய்வதையும் பண்பறிந்து, ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்” என்று கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் கமல்  maiamwhistle என்ற செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். இது வெறும் ஆப் அல்ல ஒரு பொது அரங்கம் என்றும் அவர் கூறினார். இந்தச் செயலியின் மூலம் தன்னைப் பற்றிய குறைபாடுகள் இருந்தாலும் சொல்லலாம் என்றும் அவர் கூறினார். 

மேலும், மக்கள் பிரச்னைகளை பற்றிப் பேச #theditheerpomvaa #maiamwhistle #virtuouscycles என்ற ஹேஷ்டேக்குகளை கமல் அறிமுகம் செய்தார். இந்த ஹேஷ்டேக்குகளில் மக்கள் பிரச்னைகளைப் பேசலாம் என்று கூறிய கமல் தான் ஏதாவது தவறு செய்தால் அது குறித்தும் பேசலாம் என்றும் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...