உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது- சுகாதாரத் துறை அமைச்சர் பேட்டி


கோவை, நவம்பர் 17

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் கூறினார்.

கோவையில், தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த தமிழக சுகாதார துறை அமைச்சர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சென்னை மருத்துவ தலைமையிடம் என்பதை மாற்றி அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, மாவட்ட மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 280 கோடி ரூபாய் ஜெய்கா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் 837 ரத்தவகை கண்டறியும் கருவி வழங்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகம் முழுவதும் சமீபத்தில் 800 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத் துறையில் போலியாக செயல்படும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...