கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக்கடத்த முயற்சி : மர்ம நபர்கள் துணிகரம்

கோவை, நவம்பர். 17

பாதுகாப்பு நிறைந்த கோவை மத்திய சிறை வளாகத்தில் இன்று அதிகாலை 4 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்த முயற்சி நடந்துள்ளது.



கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தனமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

அங்கு உள்ள டி.ஐ.ஜி அலுவலகம் அருகே இருந்த சந்தன மரங்கள் சுமார 20 " சுற்றளவுக்கு வளர்ந்திருந்தன.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் சிறை வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டினர். 



 அதோடு, மரத்தை வெட்ட பயன்பட்ட ரம்பம், அரிவாள்,கடப்பாறை ஆகியவற்றை மர்ம நபர்கள் அதே இடத்தில் போட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர். .



இது தொடர்பாக, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மத்திய சிறையின் முதல் அடுக்கில் தமிழக போலீசார், இரண்டாம் அடுக்கில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, மூன்றாவதாக சிறை காவலர்கள் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் வெட்டப்பட்டு இருப்பதால், அதன்  பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...