போயஸ் கார்டனில் வருமான வரி சோதனை நிறைவு - ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த அனுமதி மறுப்பு

நவம்பர் 18: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தில் 4 மணி நேரம் நீடித்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த, சசிகலா தரப்பினர் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை.

போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் நேற்றிரவு வருமான வரித்துறையினர், அதிரடியாக சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடப்பது குறித்த தகவல் தெரிந்ததும், இரவு 10:30 மணிக்கு ஜெயா டிவி மேனேஜிங் டைரக்டர் விவேக் அங்கு சென்றுள்ளார். சுமார் நான்கு மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. அதிகாலை சுமார் 2 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. இந்நிலையில், ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த அனுமதிக்கவில்லை என விவேக் தெரிவித்தார்.

சோதனைக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா வாழ்ந்த வீடு கோவில் போன்றது. இங்கு சோதனை நடத்தியது வேதனை அளிக்கிறது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை. சில கடிதங்கள், 2 பென் டிரைவ், ஒரு லேப்டாப்பை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு அதிமுக.,வினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (நவ., 18) காலை முதல் போயஸ் கார்டன் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகே அப்பகுதியில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், திடீரென போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...