ரூ. 33 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகளிர் சுய உதவிக் குழுவினர் மனு

கோவை, நவம்பர் 20: கோவையில் நிலம் வாங்கித் தருவதாக ரூ. 33 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு கந்தன் கார்டன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் அழகர்சாமி என்பவர், மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ளவர்களுக்கு ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியில் நிலம் வாங்கித் தருவதாகவும், மாதத் தவணையில் பணம் செலுத்தலாம் எனவும் கூறியுள்ளார். அழகர்சாமி உறுதியளித்தன் பேரில் லட்சுமியின் சுய உதவிக் குழுக்களில் இருந்தவர்கள் மாதத் தவணையின் அடிப்படையில் பணம் செலுத்தி முடித்துள்ளனர். இருப்பினும், பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கான நிலம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிலத்தை அளிக்காமல் ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக, லட்சுமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும், தலைமறைவாக இருந்து வரும் அழகர்சாமிக்குக் காவல்துறையினர் சாதகமாகச் செயல்படுவதாகவும், மோசடியில் ஈடுபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...