உதவித் தொகைக் கோரி எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் கைக்குழந்தையுடன் மனு


கோவை, நவம்பர் 20: அரசின் உதவித்தொகையை வழங்கக்கோரி எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ குபேந்திரன். எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட இவர், கோபியைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 45 நாட்களே ஆன கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய அரசின் உதவித் தொகையை வழங்கக் கோரி கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். 

கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பால்வினை நோய்க்கு மருந்துகள் எடுத்து வருவதாக கூறிய அவர்கள், அரசு வழங்கும் உதவித்தொகைக் கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை மனு அளித்தும் எவ்வித உதவித்தொகையும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ வேண்டும் என்ற நம்பிக்கை தரும் அரசு, அதற்கான உதவி தொகையை அளிக்காமல் இழுத்தடிப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். 

மேலும், தமிழக அரசால் வழங்கப்படும் பிரசவகால உதவித் தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய தம்பதியினர், அரசு தங்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விரைவாக உதவித் தொகைக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...