விமான டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் எண் கட்டாயமாகிறது

கோவை, நவம்பர் 22:

உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர் தங்களின் விமான டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண்ணை விமான டிக்கெட்டுடன் இணைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் 2018-ம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.

இது தொடர்பாக விமானநிலைய கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2018-ம் ஆண்டு முதல் கொல்கத்தா, அகமதாபாத், விஜயவாடா தவிர மற்ற விமான நிலையங்களில் இருந்து உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர், தங்களின் ஆதார் எண்ணை விமான டிக்கெட்டுடன் இணைக்க வேண்டும்.

ஆதார் அடிப்படை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ள இந்த புதிய திட்டத்தால், பயணிகள் விமான நிலைய முனையத்திற்குள் நுழையும் போது அவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை சோதிக்கப்படும். இதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபர் எந்த விமானத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார், எங்கு செல்கிறார் என்ற விபரங்களை பெற முடியும். பரிசோதனையின் போதே அவரைப் பற்றிய முழு விபரங்களும் தெரிந்து விடும்.

இதனால் பயணிகள் அடையாள அட்டைகள், பேப்பர் டிக்கெட்கள், போர்டிங் கார்டு ஆகியவற்றை காட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதன்மூலம், பயணிகளின் நேரம் சேமிக்கப்படுகிறது. ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பதற்கான பார் கோடு டிக்கெட்டிலேயே அச்சிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...