ஆட்டிப்படைக்கும் கந்துவட்டிக் கொடுமையை தடுத்தாக வேண்டும் - நடிகர் கமல்ஹாசன்

நவம்பர் 23

விவசாயிகள் முதல் சினிமாக்காரர்கள் வரை ஆட்டிப்படைக்கும் கந்து வட்டிக் கொடுமையை தடுத்தாக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கந்துவட்டிக் கொடுமையால் நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர். ஆனால், அண்மைக்காலமாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகர் கமல்ஹாசன் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இதனை பலர் விமர்சனம் செய்ததுடன், சினிமாத்துறையில் நிலவி வரும் கந்துவட்டிக் கொடுமை குறித்து கமல் மவுனம் காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். 

இந்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும், நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள். என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...