கோவையில் தொழில் முனைவோரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி

கோவை, நவம்பர் 23

கோவை, பீளமேடு பகுதியில் தொழில் முனைவோர் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உஜில் சந்திரன். இண்டீரியர் டெக்ரேசன் செய்வதற்கான உபகரணங்கள், இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார். இவரிடம் சென்னையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் உபகரணங்கள் வாங்க 4 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் பொருட்களை கொடுக்காமல் சந்திரன் காலதாமதம் செய்து வந்த நிலையில், சிவக்குமார் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இந்நிலையில் கோவை வந்த சிவக்குமாரை தனியாக அழைத்துச் சென்ற சந்திரன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதில் காயமடைந்த சிவக்குமார் அவரிடம் இருந்து தப்பி வந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து தகவலறிந்த பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சந்திரனை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...