நண்பனை கொலை செய்த கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

நவம்பர் 23

நண்பனைக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

நாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோடு, மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு இ.சி.இ பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் கல்லூரிப் படிப்பிற்காக, காளப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அவருடன் நீலகிரி மாவட்டம் எல்லநள்ளிப் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் பிரதீப் ஆகியோர் தங்கியிருந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஜுலை மாதம் 27-ம் தேதி அறையைச் சுத்தம் செய்வதில் சந்தோஷ், தினேஷ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால், சந்தோஷ் கத்தியால் குத்தியதில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதைக் கண்ட பிரதீப் தினேஷை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக பிரதீப் அளித்த புகாரின் பேரில், சந்தோஷ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இது தொடர்பான வழக்கு கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில்,  நீதிபதி குணசேகரன், குற்றவாளி சந்தோஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...