நீதிபதியைக் கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

கோவை, நவம்பர் 23

கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜவேலைக் கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 40-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் ராஜவேல் வழக்கறிஞர்களுடன் மோதல் போக்கினை கடைப்பிடித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தில் முறையீடும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதியின் இத்தகைய நடவடிக்கையினைக் கண்டித்து இன்று நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கும் வரை அந்த ஒரு நீதிமன்றத்தை மட்டும் காலவரையின்றி புறக்கணிப்பது எனவும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால் 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...