பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர், நவம்பர்  24

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூரில்,  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சுந்திரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் முருகேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் முதன்மை வகித்தனர். 

இதில்,  அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.  இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஜேக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

 பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்திடவேண்டும், 6வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகள் களையப்பட்டு 7வது ஊதியக்குழு அமுல்படுத்தவேண்டும், கடந்த 2004 ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 2006ம் ஆண்டு மே.31ம் தேதி வரை தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும்,தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர் பயிற்றுனர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்யவேண்டும், ஒளிவு மறைவற்ற முறையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும். ஆண்டு முழுவதும் நடத்தப்படும் நிர்வாக மாறுதலை உடனடியாக நிறுத்த வேண்டும், 12 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவர்களுக்கு சத்துணவு வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

நிறைவாக நாமக்கல் மாவட்டச் செயலாளர் தண்டாயுதபாணி நன்றி கூறினார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...