ஆர்கே நகருக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் - இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு


நவம்பர் 24 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, காலியாக உள்ள ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவால், சென்னை, ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதிக்கு, ஏப்ரலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்த வழக்கில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பக்கே கஸாங் மற்றும் லிகபல்லி, உத்தரபிரதேசத்தில் உள்ள சிகந்த்ரா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சபாங் உள்ளிட்ட காலியானத் தொகுதிகளுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட 5 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 27-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் டிசம்பர் 4-ம் தேதி ஆகும். டிசம்பர் 5-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களைத் திரும்ப பெற டிசம்பர் 7-ம் தேதி கடைசி நாளாகும். வாக்குகள் டிசம்பர் 24-ம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்த இடைத்தேர்தலின் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகை சீட்டுடன் கூடிய இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...