கோவை அருகே பயணிகள் ஆட்டோ விபத்துக்குள்ளாகி பள்ளி மாணவர்கள் ஆசிரியை காயம்

கோவை, நவம்பர் 24

கோவை அருகே பயணிகள் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியை காயமடைந்தனர்.



கோவை மாவட்டம் தென்னம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு, வேலைக்கு செல்வோர் மினி பஸ் மற்றும் பயணிகள் ஆட்டோவைவையே நம்பி உள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சங்கோதிபாளையம் சமத்துவபுரத்தில் இருந்து பயணிகள் ஆட்டோவில் அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என 12 க்கும் மேற்பட்டோர் அரசூர் ஆரம்ப பள்ளிக்கு பயணித்துள்ளனர். அப்போது ஆட்டோ அரசூர் மின்வாரிய அலுவலகம் அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் மற்றும் அதே பள்ளியை சார்ந்த ஆசிரியை ஒருவர் காயமடைந்தனர். 

இதனை தொடர்ந்து அவர்களை மீட்ட பொதுமக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு 3 மாணவர்களையும் ஆசிரியரையும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் ஆட்டோக்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது.

இதனை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதுவே இன்று ஏற்பட்ட விபத்திற்கு காரணம் என்றும், அதிகாரிகள் இப்பிரச்சனையில் தலையிட்டு பேருந்து வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...