சின்னம் முக்கியம் இல்லை, வேட்பாளர்தான் முக்கியம்- கோவையில் டி.டி.வி தினகரன் பேட்டி

கோவை, நவம்பர் 24

அதிமுக-வின் அடையாளமாகக் கருதப்படும் இரட்டை இலை சின்னத்தினை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி திரு. கே. பழனிச்சாமி அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதையடுத்து சின்னம் முக்கியமில்லை எனவும், வேட்பாளர்தான் முக்கியம் என்றும் அதிமுக (அம்மா) அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்துள்ளார்.



இன்று கோவை வந்த டி.டி.வி. தினகரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

"ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடந்த முறை சுயேட்சையாகத் தான் போட்டியிட்டோம். அப்போதே எங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததால் தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது, இரட்டை இலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். முதலமைச்சரால் தொடரப்பட்டுள்ள கேவியட் மனு சாதாரண நடைமுறை தான். அதிமுக மற்றும் சின்னம் ஒரு பொருளாக மாறிவிட்டது.

தேர்தல்களைப் பொறுத்தவரையில் வேட்பாளர் யார் என்பது தான் முக்கியம். சின்னம் பிறகு தான். தற்போது எங்கள் அணியின் சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். ஆர்.கே.நகர் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். யாரை வெற்றிபெற வைக்க வேண்டும் என அவர்களுக்குத் தெரியும்.

மதுசூதனன் எந்த அடிப்படையில் 'ஏ' மற்றும் 'பி' ஃபார்ம்-ஐ நிரப்புவார் எனத் தெரியவில்லை. மைத்ரேயன் கருத்தைப் பெரிதாக எடுக்கத் தேவையில்லை. இன்னும் ஒரு மாதத்தில் யாருக்கு டெபாசிட் என்பது தெரியும். வாக்கு வங்கி என்பது கட்சிக்குத் தான். ஆனால் ஆர்.கே.நகர் தேர்தலை பொருத்தவரை இரண்டும் துரோகிகள் கையில் சென்றுள்ளதால் மக்கள் சரியான முடிவெடுப்பார்கள். ஆட்சி மட்டும் இல்லாவிட்டால் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் இருக்கும் இடம் தெரியாமல் சென்று விடுவார்கள்.

இந்தத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. வரும் 27 முதல் டிசம்பர் 4ம் தேதிக்குள் ஒரு நாளில் தாக்கல் செய்யப்படும். அந்தத் தொகுதி அதிமுக-வின் கோட்டை. எனவே அதிமுக வெற்றி பெறும். அவர்களுக்கு வாக்கு வங்கியே கிடையாது" என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...