வாகன தணிக்கையின் போது நடந்த விபத்தில் காவலர் பலி

கோவை, நவம்பர்.24

கோவையில் வாகனத் தணிக்கையின் போது கார் மோதிய விபத்தில் காவலர் பலியானார்.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (31). 

தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 

கடந்த 15-ம் தேதி இரவு வேலந்தாவளம் சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்த முயன்ற செந்தில் குமார் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்து ஏற்பட்டது.  அவரை மீட்ட சக காவலர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று பரிதாபமாக பலியானார்.  இது தொடர்பாக் கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வாகனத் தணிக்கையின் போது காவலர் ஒருவர் பலியான சம்பவம் சக காவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...