பழங்கால சிலைகளை பதுக்கியதாக மூன்று பேர் கைது

கோவை, நவம்பர்.24

கோவையில் பழங்கால சிலைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

பீளமேட்டை அடுத்த பிருந்தாவன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் மற்றும் அரிய பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  தகவலின் பேரில் நேற்று இரவு அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு இருந்த ஐம்பொன் சிலைகளான சரஸ்வதி, நாகதேவி சிலைகளைக் பறிமுதல் செய்தனர். 



மேலும், செம்பு வளையல்கள், செம்பு பாத்திரங்கள் மற்றும் 2 சங்கு உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்த 2 சூட்கேஸ்களையும் மீட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக, பீளமேடு  பகுதியைச் சேர்ந்த பசந்திரசேகரன் (48),பாலக்காடு மாவட்டம் வடக்காஞ்சேரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (34) மற்றும் இடையர்பாளையம் சீனிவாசநகரைச் சேர்ந்த ஜெயபாண்டியன் (39) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

 

போலீசார் நடத்திய விசாரணையில் கைதான மூன்று பேரும் சிலைகள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் அனைத்தும் தங்கள் முன்னோர்கள் பயன்படுத்தியதாகவும், அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, கைதான மூன்று பேரையும் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்துச்சென்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...