எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைத்த அலங்கார நுழைவாயிலால் வாலிபர் பலியான விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் எம்எல்ஏ மனு

கோவை, நவம்பர் 25

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவாயிலால் வாலிபர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மனு அளித்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அ.தி.மு.க. சார்பில் கோவை ஹோப்ஸ் பகுதியில் அலங்கார நுழைவு வாயில் வைக்கப்பட்டது. சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட இந்த நுழைவு வாயிலில் நேற்று இரவு வாகனம் மோதிய விபத்தில்  சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சூழலில், விபத்துக்கு காரணமான அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று மாலை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை மாநகர காவல் ஆணையர் K. பெரியய்யா-விடம் மனு அளித்தார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களி கூறியதாவது:- 

நெடுஞ்சாலைகளில் மிகப்பெரிய அலங்கார வாயிகள் மற்றும் பேனர்கள் வைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும் அ.தி.மு.க.வினர் தீர்ப்பை மதிக்காமல் பல அடி உயரத்தில் அலங்கார நுழைவு வாயில்களை கோவை மாநகராட்சி பகுதிக்குள் அமைத்துள்ளனர். 

இதனால் ஒரு வாலிபர் உயிரிழந்துள்ளார். 

மாநகர காவல்துறை ஆணையர்  இந்த பிரச்சனையில் தலையிட்டு வாலிபர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வாலிபருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தால் தி.மு.க.சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...