ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு 9 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழு நியமனம்


நவம்பர் 26

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்காக 9 பார்வையாளர்கள் கொண்ட குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அந்தக் குழு வரும் 4-ம் தேதி தமிழகம் வருகிறது.

ஆர்கே நகர் தொகுதியில் டிசம்பர் 21-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அணியினர் கோரியிருந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைந்த அதிமுக அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் வழங்கியது. எனவே, இந்த தேர்தலில் ஒருங்கிணைந்த அணி, அதிமுக என்ற பெயரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. இதேபோல, டிடிவி தினகரன் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், திமுக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கடும் போட்டி நடப்பதற்கு சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், பொது பார்வையாளர்கள், செலவினம், காவல் பார்வையாளர்கள் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்தக் குழு வருகிற டிசம்பர் 4-ம் தேதி தமிழகம் வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்த பின் பார்வையாளர்கள் தங்கள் பணிகளை தொடங்குவார்கள். தேவைக்கேற்ப வாக்குப்பதிவு நெருங்கும் தேதியில் கூடுதல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...