வங்கி மோசடியில் ஈடுபட்ட மல்லையாவுக்கு மும்பை சிறை ரெடி - மத்திய அரசு தகவல்

நவம்பர் 26

லண்டனிலிருந்து இந்தியாவிற்கு தொழில் அதிபர் மல்லையா நாடு கடத்தப்பட்டால், அவரை மும்பை ஆர்தர் சாலையில் இருக்கும் சிறையில் அடைக்க இருப்பதாக பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, கிங்பிஷர் விமானசேவை நிறுவனம் துவங்க பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தவில்லை. அவருக்கு எதிராக நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வங்கிகள் வழக்கு தொடர்ந்தன. கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டதும், விஜய் மல்லையா பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பியோடி தலைமறைவானார். 

மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி மத்திய அரசு தரப்பில், பிரிட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லண்டன் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன், அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது. அவரை நாடு கடத்தக்கோரும் மனு மீதான விசாரணை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வரும் டிசம்பர் 4-ம் தேதி துவங்க உள்ளது. முன்னதாக, நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, மல்லையா நாடு கடத்தப்பட்டால், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், இந்திய சிறைகளில் மனித உரிமை மீறல்கள் அதிகளவு நடப்பதாகவும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: மல்லையா நாடு கடத்தப்படுவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் போது மல்லையா நாடு கடத்தப்பட்டால், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஆர்தர் சிறையில் அடைக்கும் திட்டம் உள்ளது. சிறையில் அடைக்கப்படும் நபர்களை பாதுகாப்பது மாநில அரசின் கடமையாகும். தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மல்லையா கூறுவது தவறான தகவல். 

இந்திய சிறைகள், மற்ற நாடுகளில் உள்ள சிறைகளை விட சிறந்தது. சிறை கைதிகளின் உரிமைகளும் முழு அளவில் பாதுகாக்கப்படுகிறது. மும்பை சிறையில், கைதிகளுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன. முழு பாதுகாப்புடன் மல்லையா அங்கு இருப்பார். இந்தியாவில் நடக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே உயிருக்கு ஆபத்து, மனித உரிமை மீறல் என மல்லையா பொய் சொல்கிறார் என பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...