வீட்டு உபயோகப்பொருட்களில் வைத்து தங்கம் கடத்தல்: கோவை வந்த விமான பயணியிடம் 816 கிராம் தங்கம் பறிமுதல்


கோவை, நவம்பர் 26

வீட்டு உபயோகப்பொருட்களில் வைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்த வாலிபரிடம் இருந்து 816 கிராம் தங்க கட்டிகளை கோவை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 4:30 மணியளவில் ஏர் அரேபியா வந்த விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தப்பட்டுள்ளதாக கோவை சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், விமானத்தின் மூலம் கோவை வந்தடைந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பயணிகளின் உடமைகளை அங்கு உள்ள ஸ்கேன் கருவி மூலம் சோதித்ததில் ஒருவரின் பையில் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.



இதையடுத்து அந்த பையை அதிகாரிகள் சோதனையிட்டபோது பல்வேறு வகையான கத்திகளினுள் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக, அந்த பயணியிடம் விசாரித்ததில் அவர், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த அப்தாப் (37) என்பது, சார்ஜாவில் இருந்து தங்க கட்டிகளை சட்ட விரோதமாக எடுத்து வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து, அவரிடம் இருந்த 816 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அப்தாப்-ஐ கைது செய்தனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...