இரட்டை இலை விவகாரம்: ஓபிஎஸ், இபிஎஸ் சார்பில் கேவியட் மனுத் தாக்கல்

நவம்பர் 27

இரட்டை இலை விவகாரத்தில் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தி தில்லி உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சியின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இதனால், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தினகரன் கூறியிருந்தார்.

இதனையடுத்து, இரட்டை இலை சின்னத்திற்கு தடை கோரி தினகரனோ அல்லது வேறு யாரோ வழக்கு தொடர்ந்தால், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தரப்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தனித்தனியாக கேவியட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை விவகாரத்தில் தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்களை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...