இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் டிச.,1-ம் தேதி ‘உயர் கல்வியில் மாற்றம்’ மாநாடு

நவம்பர் 27

இந்திய தொழில் கூட்டமைப்பின் மூன்றாம் பதிப்பாக தேசிய உயர்கல்வி மாநாடு, வரும் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கோவையில் நடக்கிறது. உயர்கல்வியில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளன.

இது குறித்து, மாநாட்டின் தலைவர் நந்தினி ரங்கசாமி, துணைத்தலைவர் மலர் விழி ஆகியோர் கூறியதாவது: இந்தியாவில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்கள் என 48,000 கல்வி நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும், இவற்றில் பல உலக அளவில் தரநிர்ணயத்தில் மிகவும் பின்தங்கியவைகளாக உள்ளன. எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர் கல்வியில் மாபெரும் மாற்றம் ஏற்பட வேண்டும். நிதி ஒதுக்கீடு, தலைமைப்பண்பு மற்றும் மேலாண்மை, தர உறுதி, தன்னாட்சி, அங்கீகாரம், தொழில்-கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் தேவையாக உள்ளது.

இந்திய தொழில் கூட்டமைப்பு, தற்போதுள்ள உண்மை நிலவரம், திறன் தேவை, தொழிற்சாலைக்கு ஏற்றக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு, புதுமையான கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உயர்த்தப் பாடுபட்டு வருகிறது. இது குறித்த பல்வேறு பரிசீலனைகளை பங்குதாரர்கள், நிபுணத்துவம், கொண்ட பலரது ஆலோசனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆவணங்களை அரசிடம் கடந்த ஆண்டு ஒப்படைத்துள்ளது.

 

உயர்கல்வியின் நோக்கமே புதுமைகளை மேம்படுத்தி, தொழில்முனைவோரை மாணவர்களிடையே உருவாக்கி, நாட்டின் அடிப்படை பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இதுவே வெளிநாட்டினருக்கு நமது சேவை சென்றடையக் காரணியாக இருக்கும். இதன் அடிப்படையாகக் கொண்டு, அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் இந்த மாநாட்டில் பேச உள்ளனர். தமிழ்நாடு உயர்க்கல்வி முதன்மை செயலர் திரு.சுனில் பலிவால் மாநாட்டைத் துவக்கி வைக்க இசைந்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். 

பள்ளிக் கல்வி மாநாடு : 

இதேபோல, இந்திய தொழில் கூட்டமைப்பு,  பள்ளிக் கல்வி மாநாடு டிசம்பர் 2-ம் தேதி நடக்கிறது. இதில், பள்ளிக் கல்வியில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள், தமிழ்ப் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், மேம்பாடுகள் குறித்த ஆலோசனைகள், மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் மாநிலக் கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ செங்கோட்டையன், தமிழ்நாடு பள்ளி கல்வி்ததுறை முதன்மை செயலர் திரு. பிரதீப் யாதவ் ஆகியோரிடம் அளிக்கப்படும். 

21-ம் நூற்றாண்டில் பள்ளியில் தலைமைப்பண்பு கல்வி குறித்து இதில் பேசப்படும். இந்த மாநாட்டில், மத்திய கல்வி வாரியத்தின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் ஜி பாலசுப்ரமணியன், கரடி டேல்ஸ்/கரடி பாத் திரு. சிபிவிஸ்வநாத், இஎல்டி கன்சல்டன்ட் ஜோதி ஸ்வருப், ஒன்ஸ்டெப் சிஇஓ மற்றும் நிறுவனர் ஷிவ் தேவன், விப்கியார் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் வினேஷ் மேனன், நெக்ஸ்ட் கல்வி தலைவர் ஆர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...