ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து அச்சமின்றி புகார் அளிக்கலாம்- விசாரணை ஆணைய தலைவர் பேட்டி

கோவை, நவம்பர் 28

ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்கலாம் என்று விசாரணை ஆணைய தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி திரு. ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் இன்று கோவையில் பத்திரிகையாளர்களிடையே பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இதுவரை கோவையில் 50 பேர் விசாரணை ஆணையத்திடம் பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் 39 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் வரும் 3 நாட்களுக்கு விசாரணை நடத்தப்படும்.

கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகும் பொதுமக்களை காவல்துறையினர் அச்சுறுத்தக் கூடாது.காவல்துறையினர் மிரட்டினால் பயமின்றி விசாரணை ஆணையத்தில் புகார் அளிக்கலாம். தற்போது கலவரம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பின்னர் காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். இதுவரை நடந்த விசாரணையில் காவல்துறைக்கு சாதகமாகவே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மேலும், ஆட்டோ மற்றும் குடிசைகளுக்கு காவல்துறையினர் தீ வைத்தது தொடர்பான வீடியோ தடயவியல் சோதனைக்கு அனுப்பத் தேவையில்லை. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும்.

நிவாரணம் பெற்ற பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராவது குறைவாகவே உள்ளது. அடுத்த மாதம் மதுரையில் விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், விசாரணைக் காலம் நீட்டிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...