வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கும் போக்குவரத்து போலீசார்

கோவை, நவம்பர் 28

வாகன விபத்துகளை குறைக்கும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாநகர போலீசார் வாகன ஓட்டிகளிடம் வினியோகித்தனர். 



கோவை மாநகரில் சாலை உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவல் நிலைய எல்லைகளுக்குள்ளும் உள்ள முக்கிய சந்திப்புகளுக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். 



நேற்று மாலை பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் பாபு துண்டு பிரசுங்களை வழங்கினார்.

 

அதே போல், இன்று காலை வெரைட்டிஹால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் S.முருகன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

'இந்தியாவில் நடக்கும் மொத்த விபத்துக்களில் 12 சதவிகித விபத்துகள் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார். 

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...