தொடர் கொலையில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை, நவம்பர் 29

ஒரே இரவில் மூன்றுபேரைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், காரமடை அருகே புங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். சென்ட்ரிங் தொழிலாளியான இவர் குடும்ப வறுமையின் காரணமாக 2013 மார்ச் 28ம் தேதியன்று உறவினர் ஆனந்தகுமார் உடன் மது அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இவரது நண்பரான வேலுசாமியிடம் (49) ஸ்ரீதர் செலவிற்கு பணம் கேட்டுள்ளார். வேலுசாமி பணம் தர மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் தான் வைத்திருந்த கத்தியால் குத்தி அவரை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாயினை திருடி விட்டு தப்பினார்.

பின்னர் காரமடை கண்ணார்பாளையம் பிரிவு அருகே வந்த ஸ்ரீதர் அங்குள்ள பெட்டிக்கடையை உடைத்து பணம் திருட முயற்சித்த நிலையில், அதைக்கண்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளி ராஜேந்திரன் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற மாரியப்பன் இருவரின் சண்டையை விலக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் ஸ்ரீதர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

தொடர்ந்து அங்கிருந்து காரமடை ரயில் நிலையம் அருகே சென்ற அவர் சாலையோரமாக இருந்த குடிசைக்குள் தலைமறைவாக முயற்சித்த நிலையில் குடிசைக்குள் இருந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சேகர் கூச்சலிட்டுள்ளார். அவரையும் ஸ்ரீதர் கத்தியால் குத்தி கொலைசெய்துவிட்டு தப்பினார்.

ஒரே நாள் இரவில் மூன்று பேரை கொலை செய்த இச்சம்பவம், காரமடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் வேலுசாமி கொலை வழக்கு கோவை 5-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், சேகர் மற்றும் ரமேஷ் கொலை வழக்கு தனித்தனியாக 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது.

இதில், ரமேஷ் கொலை வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி விஜயா முன்னிலையில் நடந்தது. விசாரணையின் இறுதியில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...