உள்ளாட்சித் துறையில் இலஞ்சப் புகார்கள் அதிகரித்து வருகின்றன, மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்துவதில் மெத்தனம்: பாஜக தேசிய செயலாளர் கடும் கண்டனம்

கோவை, நவம்பர் 29

ஒராண்டு காலமாக உள்ளாட்சித் துறையில் இலஞ்சப் புகார்கள் அதிகரித்து வருகின்றனர். தமிழகத்திற்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கின்றது. ஆனால், கோவையில் இதுவரை ஸ்மார்ட் சிட்டிக்கான தலைமை அதிகாரி கூட நியமனம் செய்யப்படவில்லை என்று தன் கண்டனத்தை பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று பேசுகையில், கூறியதாவது:



 தமிழகத்திற்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கின்றது. ஆனால், கோவையில் இதுவரை ஸ்மார்ட் சிட்டிக்கான தலைமை அதிகாரி கூட நியமனம் செய்யப்படவில்லை. தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் கழிவறை திட்டம், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் உதவிகளை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். கடந்த ஒராண்டு காலமாக உள்ளாட்சித் துறையில் இந்த லஞ்சப் புகார்கள் அதிகரித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட அமைச்சர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. சென்னை பாம்பன்சாமி திருக்கோவிலுக்கு பல ஆண்டுகளாகத் தீபம் காட்டவில்லை. இதனால், சென்னையில் வெள்ளம் வந்து நாசமாகப் போகின்றது. சென்னை பாம்பன்சாமி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தாலும் கோவிலில் பூஜை ஏன் நிறுத்தப்பட்டது. இந்து அறநிலையத்துறை, துப்புக்கெட்ட நியாயமில்லாத துறையாக இருக்கின்றது. அர்ச்சகர்களுக்குச் சம்பளம் கொடுக்க பணம் இல்லாத போது செயல் அலுவலர்களுக்கு மட்டும் எதற்குச் சம்பளம் ?. 

மேலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.  மாணவி ஹதியா விவகாரம் பற்றி கருத்துச் சொல்லவே விரும்பவில்லை. கன்னியாஸ்திரிகளை பற்றி யாரும் பேசாத போது, ஈசா மையத்தைப் பற்றி யாரும் பேச தேவையில்லை. கௌரி லங்கேஷ் கொலை விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக் காரணம் எனச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது இஸ்லாமியர் கைது செய்யப்பட்டுள்ளார் இதை ஏன் ஊடகங்கள் பேசவில்லை.

கடலூரில் ஆனந்த என்ற இளைஞர் மீது விடுதலை சிறுத்தைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சி மேற்கொண்டு விட்டுத் தப்பி விட்டதாகத் தகவல் வருகின்றது. ஆனால், காவல்நிலையத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் எந்தவித பாரபட்சமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இவ்வாறு கூறினார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...