தயாரிப்பாளர் தற்கொலை விவகாரம் - அன்புச்செழியனின் மேலாளர்கள் கைது

நவம்பர் 29 

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பைனான்சியர் அன்புசெழியனின் மேலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் உறவினரும், அவரின் அலுவலக மேலாளர் மற்றும் இணை தயாரிப்பாளர் அசோக் குமார் கடந்தவாரம் தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மரணத்திற்கு பைனான்சியர் அன்புசெழியன் காரணம் எனக் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து. அன்புசெழியன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதால் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அன்புசெழியனின் நண்பர் மற்றும் அவரின் கோபுரம் பிலிம்ஸ் மேலாளரிடம் போலீசார் நேற்று ரகசிய விரசாணை நடத்திய நிலையில், இன்று அன்புசெழியனின் அலுவலக மேலாளர் முருகன், சென்னையில் கைது செய்யப்பட்டார். வளசரவாக்கம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் இந்தக் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதேபோல், அன்புசெழியனின் மற்றொரு மேலாளர் சாதிக்கும் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, ஐதரபாத்தில் தலைமறைவாக இருப்பதாகக் கூறும் அன்புச்செழியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...