ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு

நவம்பர் 30 

ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளராக மதுசூதனன் ஆட்சி மன்ற குழுவால் ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 28 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச்செயலாளர் தமிழ் மகன் உசேன், தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் ஆதிராஜாராம், வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், 42-வது வார்டு முன்னாள் உறுப்பினர் அஞ்சுலட்சுமி, 1996-ல் ஆர்.கே.நகரில் போட்டியிட்ட ஆர்.எம்.டி.ரவீந்திரஜெயன், 2016 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட நூர்ஜகான் உள்ளிட்டோரும் மனு கொடுத்துள்ளனர். 

இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக நிர்வாகிகளிடம் கடும் போட்டி ஏற்பட்டு நிலவியது. எனவே, வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காகச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, வேலுமணி மற்றும் மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆட்சிமன்றக் குழுவை சேர்ந்த 8 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஜஸ்டின் செல்வராஜ் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசித்தனர். 

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த ஆலோசனையில் மதுசூதனன் ஆட்சிமன்றக் குழுவால், ஆர்.கே. நகர் வேட்பாளராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆர்.கே.நகர் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டசபை தொகுதியை அதிமுகவின் கோட்டை என்றே கூறலாம். இதுவரை அங்கு நடைபெற்ற 9 சட்டசபை தேர்தல்களில் 5 முறை அதிமுக வெற்றி பெற்று உள்ளது. திமுகவும், காங்கிரசும் தலா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளன. அதிலும், கடந்த மூன்று சட்டசபை தேர்தல்களிலும் அதிமுகவே தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...