இரட்டை இலை விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு

நவம்பர் 30

இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக, சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. கடந்த மார்ச் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இரு அணியினரும், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கொண்டாடினர். இதனால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கித் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் ஓபிஎஸ் அணியும் இணைந்தன. இதனால், இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரும் போட்டி, எடப்படி பழனிசாமி, ஓபிஎஸ் அணிக்கும் டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையில் மாறியது. இரு தரப்பினரும் தலைமை தேர்தல் ஆணையத்தில் தங்களுக்குச் சாதகமான ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். அந்த ஆவணங்கள் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் 7 கட்டங்களாக விசாரணை நடத்தினர். கடந்த 24-ந்தேதி இந்த வழக்கில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு “இரட்டை இலை” சின்னத்தை ஒதுக்கீடு செய்து அறிவித்தனர்.

நாடாளுமன்றம், சட்டசபை மற்றும் செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள டிடிவி தினகரன் அணியினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக எந்த உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தாலும், தங்கள் கருத்தை கேட்காமல் வெளியிடக் கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் ஏற்கனவே கேவியட் மனுதாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...