இரட்டை இலை விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு

நவம்பர் 30

இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக, சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. கடந்த மார்ச் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இரு அணியினரும், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கொண்டாடினர். இதனால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கித் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் ஓபிஎஸ் அணியும் இணைந்தன. இதனால், இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரும் போட்டி, எடப்படி பழனிசாமி, ஓபிஎஸ் அணிக்கும் டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையில் மாறியது. இரு தரப்பினரும் தலைமை தேர்தல் ஆணையத்தில் தங்களுக்குச் சாதகமான ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். அந்த ஆவணங்கள் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் 7 கட்டங்களாக விசாரணை நடத்தினர். கடந்த 24-ந்தேதி இந்த வழக்கில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு “இரட்டை இலை” சின்னத்தை ஒதுக்கீடு செய்து அறிவித்தனர்.

நாடாளுமன்றம், சட்டசபை மற்றும் செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள டிடிவி தினகரன் அணியினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக எந்த உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தாலும், தங்கள் கருத்தை கேட்காமல் வெளியிடக் கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் ஏற்கனவே கேவியட் மனுதாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...