ரகுபதி மரணத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - கோவையில் மு.க.ஸ்டாலின் பேட்டி


கோவை, நவம்பர் 30

அ.தி.மு.க.வினர் அமைத்த அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற உயிரிழந்த சம்பவத்தில் தமிழ அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



பின்னர், சின்னியம்பாலயத்தில் உள்ள ரகுபதியின் வீட்டிற்குச் சென்ற அவர், ரகுபதியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 



ரகுபதி என்ற இளைஞர் மணக்கோலத்தில் இருக்க வேண்டியவர். அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடையிருந்தும் காந்திபுரம் மேம்பாலம் திறக்கப்பட்ட போது ஆளும் கட்சி சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பெயரிட்ட பட்ட பலூன் பறக்க விடப்பட்டதை அனைவரும் அறிவோம்.



நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளும் கட்சி எல்லை மீறி செயல்பட்டு வருகிறது. நான் செயல்தலைவரான போதிலே, பொது மக்களுக்கு இடையூராக இருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தினேன். அது தி.மு.க.வினரால் கடைபிடிக்கப்படுகிறது.

ரகுபதி லாரியிலிருந்து தப்பிக்க ஓரம் கட்டியபோது வளைவில் மோதி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.

கோவையில் ஆயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். தமிழக அரசு ரகுபதி-யின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் பொங்கலூர் பழனிச்சமியின் சகோதரர் மகளான வித்யா உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்த அவர் இன்று கோவை வந்தார். 

ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள வித்யா-வின் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், வித்யாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை நலம் விசாரித்தார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...