பேஸ்புக் ரத்த தானம்: 40 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் விருப்பம்

சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் தளத்தில் சமீபத்தில் வழங்கப்பட்ட ரத்த தானம் அம்சத்திற்கு அதிகப்படியான இந்தியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த அம்சம் மற்ற நாடுகளிலும் வழங்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் ரத்த தானம் செய்பவர்களுக்கு உதவியாய் இருக்கும் நோக்கில் இந்த அம்சம் முதற்கட்டமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். ரத்தம் தேவைப்படுவோருக்கு மட்டுமின்றி ரத்தம் வழங்குவோரை நிறுவனங்கள் தரப்பில் சுலபமாகத் தொடர்பு கொள்ள பேஸ்புக் டூல்கள் உதவியாய் இருக்கும் என சோஷியல் பிளட் நிறுவனத்தின் துணைத் தலைவர் நயோமி கிளெய்ட் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள், ரத்த வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பேஸ்புக்கில் ரத்த தானம் குறித்த நிகழ்வுகளை உருவாக்க முடியும். இதன்மூலம் ரத்த தானம் செய்ய விரும்புவோரை மிக எளிமையாகத் தொடர்பு கொள்ள முடியும். 

2018-ம் ஆண்டின் துவக்கத்தில் பேஸ்புக் ரத்த தான அம்சம் வங்கதேசத்திற்கும் வழங்கப்படும், இந்தியா போன்றே வங்கதேசத்திலும் வாராவாரம் ரத்த தானம் செய்வோர் தொடர்ந்து விருப்பம் தெரிவிப்பர் என கிளெய்ட் தெரிவித்தார். ரத்த தானம் மட்டுமின்றி பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி புதிய டூல் மற்றும் அம்சங்களைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பாதுகாப்பாக இருக்க உதவி செய்ய முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. 

பேஸ்புக்கில் புதிதாக மென்டார்ஷிப் கனெக்ஷன் புரோகிராம், புதிய நிதி திரட்டும் டூல், ரத்த தான நிகழ்வு மற்றும் தற்கொலை தடுப்பு நிகழ்வு சார்ந்த அம்சங்களை வழங்கப்பட இருப்பதாகச் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

மென்டர்ஷிப் மற்றும் சப்போர்ட் அம்சம் மூலம் வழிகாட்டிகள் மற்றும் உதவி பெறுவோர் இணைந்து நேரடியாகத் தொடர்பு கொண்டு, தொண்டு நிறுவனங்களின் நிகழ்வுகளில் பங்கேற்க முடியும் என கிளெய்ட் தெரிவித்தார். பேஸ்புக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து நிதியும், நேரடியாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...