அமேசான், பேடிஎம் பயன்படுத்தவும் இனி ஆதார் கட்டாயம்

மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், இனி அமேசான், பேடிஎம் போன்றவைகளைப் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. மொபைல் எண்கள், வங்கிக் கணக்கு ஆகியனவும் ஆதாருடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது இன்டர்நெட் கம்பெனிகளின் சேவைகளை பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக பெங்களூருவைச் சேர்ந்த வாடகை கார் நிறுவனமான ஜூம்கார், வாடிக்கையாளர்கள் தங்களின் அடையாளத்திற்காக முன்பதிவின் போது ஆதார் எண்ணை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி உள்ளது. ஆதார் எண் இல்லாத புக்கிங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

தற்போது, அமேசான் நிறுவனமும், வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை அளிக்கும்படி கேட்டு வருகிறது. ஒருவேளை வாடிக்கையாளர் ஆதார் எண்ணை தர மறுக்கும் பட்சத்தில், அவரைப் பற்றிய பிற விபரங்களை பெற முடிவு செய்துள்ளது. இதே போன்று மொபைல் வேலட்டான பேடிஎம் சேவையை பயன்படுத்தவும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வாடகை கார் நிறுவனங்களான ஊபர், ஓலா ஆகியனவும் வாடிக்கையாளர்களை ஆதார் மூலம் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக ஆதார் எண்ணை அளிக்கும்படி கேட்டு வருகின்றன.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...