கோவையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் - வைகோ சந்திப்பு

கோவை, நவம்பர் 30

கோவை விமான நிலையத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு "அரசியல் நாகரீகத்துக்காக"  நிகழ்ந்ததாக வைகோ தெரிவித்துள்ளார். 

இந்தச் சந்திப்பிற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  மத்திய அரசு தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது. பிரதமர் மோடி, நீயூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். இந்தத் திட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல், தோப்புக்கரணம் போடும் அரசாக இருக்கின்றது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் முல்லை பெரியாறு, இடுக்கி அணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து வருகின்றது.

மத்திய அரசின் துரோகத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி தொடர்ந்து போராடுவோம். 

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவில் மோதி உயிரிழந்த ரகுவின் மரணம் வருத்தம் அளிக்கின்றது. இந்த உயிரிழப்பிற்கு அரசேக் காரணம். ஆர்.கே. நகர் தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாட்டினை வரும் 3-ம் தேதி காலை தெரிவிப்பேன். என்றார்.

இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்குள் சென்ற வைகோ, திமுக செயல்தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சிறிது நேரம் பேசினார். பிறகு, இந்தச் சந்திப்பு தொடர்பாகச் செய்தியாளர்களிடம் மீண்டும் பேசிய அவர், அரசியல் நாகரீகத்துக்காக  இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. சிறிது நேரம் காத்திருந்து பார்ப்பதில் தவறில்லை. விமான நிலையங்களில் சந்திப்பு நடப்பது வழக்கமானது. மேலும், தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...