செல் போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்கி விபத்து ஏற்பட்டதில் 2,138 நபர்கள் உயிரிழந்துள்ளனர்

கோவை, டிசம்பர் 1

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளால் 17,218 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் 4,091 பேரும், பல்வேறு இருசக்கர வாகன விபத்துக்களில் சிக்கி 5,666 பேரும் குடி போதையில் வாகனம் ஓட்டியதால் 6,131 பேரும், செல் போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்கி விபத்து ஏற்பட்டதில் 2,138 பேரும் உயிரிழந்துள்ளனர். இதை மாணவ மாணவிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.



போக்குவரத்து விதிகளை அனைத்து தரப்பினரும் முறையாக பின்பற்ற வேண்டி கோவை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு போலீசார் விநியோகிதது வருகின்றனர். 

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, கோவை ராஜ வீதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி-யில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இன்று போக்குவரத்து விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.

மாநகர போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைத்த இந்த பயிற்சி வகுப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்போது மாணவிகளிடம் போலீசார் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளால் 17,218 பேர் உயிரிழந்துள்ளனர். 



வருங்கால வாகன ஓட்டிகளான நீங்கள் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தால் சாலை விபத்துக்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை வெகுவாக குறையும். சாலை விதிகளை நீங்கள் கடைபிப்பது மட்டுமல்லாது உங்கள் குடும்பத்தினரையும் அவற்றை மதிக்க கற்றுக்கொடுங்கள்.

இவ்வாறு போலீசார் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...