ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு “சிறந்த ஆசிரியர்கள் விருது”

கோவை, டிசம்பர் 1

கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் ரோட்டரி கிராமப்புற கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் முயற்சிகளை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் வகையில் “சிறந்த ஆசிரியர்கள் விருது” வழங்கப்பட்டது.இதில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த மொத்தம் 25 ஆசிரியர்களுக்கு “சிறந்த ஆசிரியர்கள் விருது” வழங்கப்பட்டது.

“சிறந்த ஆசிரியர்கள் விருது” வழங்கும் விழா கோவை அவினாசி சாலையில் உள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மேட்டுப்பாளையம், சச்சிதாந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளியின் செயலாளர் கவிதாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஆசிரியர் என்பவர் மருத்துவர்களைப் போன்றவர்கள். மருத்துவர்கள் உடலில் உள்ள நோய்களை போக்குகிறார்கள். ஆசிரியர்கள் மாணவர்களிடம் உள்ள அறியாமை என்ற நோயை போக்குகிறார்கள்.



உலகத்திலேயே சிறந்த கல்வியை வழங்கும் நாடான பின்லாந்தில் உள்ள பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு நான்கு வகுப்பறைகள் இருக்கும். அந்த நான்கிலும் ஒரே சமயத்தில் ஒரே பாடம் நடத்தப்படும். மாணவர்கள் தங்களுக்கு எந்த ஆசிரியரின் வகுப்பு பிடிக்கின்றதோ அந்த வகுப்பறையில் சென்று அமர்ந்து கொள்ளலாம். அங்கு நீதிபதிகளை விட ஆசிரியர்களுக்கு மதிப்பு அதிகம். இந்தியா ஒரு வளரும் நாடு. முப்பது ஆண்டு மாற்றம் இந்த மூன்று ஆண்டுகளிலேயே நடந்துள்ளது. உலகத்திலேயே அதிகப்படியான சிந்தனை நம்மிடம் உள்ளது' என்றார்.

இதனைத்தொடர்ந்து, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் தலைவர் சாண்டியாகோ ஜேசு பேசுகையில், அறிவியல், சமூக அறிவியல், கணிதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் போன்ற பாடங்களைக் கையாளும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் இரண்டு ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு விருது வழங்கப்படுகிறது.



உயர்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பிற்கு 15 முக்கிய பாடங்களைக் கையாளும் ஆசிரியர்கள் தங்கள் முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள்" என்றார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...