பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கட்அவுட்களை அகற்றக் கோரி திமுக வழக்கறிஞர் அணியினர் ஆட்சியரிடம் மனு

கோவை, டிசம்பர் 1

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள கட்அவுட்களை அகற்றக் கோரி திமுக வழக்கறிஞர் அணியினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை வ.உ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வரும் மூன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மாநகரம் முழுவதும் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த நவம்பர் 25-ம் தேதி நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் மோதி ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விதிமுறைகளை மீறிய கட் அவுட் மற்றும் பேனர்களை அகற்றவும், அனுமதி பெற்று இருந்தாலும் பொதுமக்களுக்கு இடையூறு இருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது. ஆனால் அந்த உத்தரவுகள் கடைப்பிடிக்கப்படவில்லை. என்று புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் அந்த நீதிமன்ற உத்திரவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த திமுக வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற உத்திரவுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிகரனிடம் வலியுறுத்தி மனு அளித்தனர்.

மேலும், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடமும் மனு அளிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...