கோவையில் முதல்முறையாக குழந்தையின்மை சிகிச்சைக்கு (IMSI) இம்சி சிகிச்சை முறை அறிமுகம்

கோவை, டிசம்பர் 1

சுதா கருத்தரித்தல் மையம் கோவையில் கடந்த எழு ஆண்டு காலமும், ஈரோட்டில் இருபத்தி எட்டு ஆண்டு காலமும் செயல்பட்டு வருகிறது. குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை பிறக்க (IMSI) இம்சி என்கின்ற அதி நவீன சிகிச்சை முறையை கோவையில் முதல் முறையாக இவ்மையம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம்படுத்தியுள்ளது.

இலங்கயை சேர்ந்த நிரோஷா(35) பிரேமதிலகே(45) தம்பதியினர் குழந்தையின்மை சிகிச்சைக்காக இவ்மையத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அணுகியுள்ளனர். அவர்களுக்கு இம்சி சிகிச்சை முறை மூலம் தற்போது குழந்தை பிறந்துள்ளது.



இதுக்குறித்து இவ்மையத்தின் தலைமை மருத்துவர் தனபாக்கியம் கூறுகையில், ”இந்த அதிநவீன சிகிச்சை முறை கோவையில் முதல்முறையாக அறிமுகம்படுத்தியுள்ளோம். இதன் மூலம் பல நாடுகளில் மேற்கொள்ளப்படும் அதிநவீன சிகிச்சை முறை கோவையிலும் மேற்கொள்ளப்படும். குழந்தையில்லா தம்பதியினர் இந்த சிகிச்சையின் மூலம் எளிதில் பயனடைய முடியும்.

இம்சி சிகிச்சை முறை மூலம் ஆண் விந்துவை 6500 மடங்கு உருப்பெருக்கி காட்டப்பட்டு விந்துவில் உள்ள குறைகளை நிக்கி வீரியமான மற்றும் தரமான விந்துவை பெண்ணின் கருமுட்டையில் உட்செலுத்தி குழந்தை உருவாக்க முடியும்,” என்றார்.

இந்த சிகிச்சை முறைக்கு தற்போது சிகிச்சையிக்கு ஆகும் செலவை விட கூடுதலாக ரூபாய் 25000 செலவாகும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது குழந்தையின்மை அதிகரித்து வருவதற்கு காரணம் மக்களின் வாழ்வு முறையும், உணவு பழக்க வழக்கங்கள் தான் காரணம் என்றும் அவர் கூறினார்.

அதே போல் “ஆண்கள் தங்களது செல்போன்களை மேல் சட்டையில் வைக்க வேண்டும் எனவும் மடிகணினியை மடியில் வைத்து பயன்படுத்தவும் கூடாது,” எனவும் அவர் அறிவுரை வழங்கினார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...