எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோவை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்


கோவை, டிசம்பர் 2

கோவை வ.ஊ.சி. மைதானத்தில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அ இ அ.தி.மு.க சார்பில் நடைபெற உள்ள இவ்விழாவில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். 

இந்த நிலையில், விழாவையொட்டி கோவை புற நகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீசார் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

1) கேரளா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேலந்தாவலம், மலுமிச்சம்பட்டி மற்றும் செட்டிபாளையம் வழியாக பல்லடத்தை அடையவும்.

2) பொள்ளாச்சியில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள் நெகமம் வழியாக பல்லடத்தை அடையவும்.

3) மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் அன்னூர் வழியாகச் செல்லவும்.

4)அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை என மாநகர பகுதிகளுக்குள் செல்லும் சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் எல்&டி பைபாஸ் சாலையை பயன்படுத்தவும். 

இந்த போக்குவரத்து மாற்றம் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை அமலில் இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...