ரகுவின் மரணம்: எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலின் மூலம் அரசியலாக்கப்படுகிறது, என்கிறார் முதலமைச்சர்

கோவை ரகு உயிரிழப்பு வேதனைக்குரியது. பேனரால் உயிரிழப்பு நடக்கவில்லை என்பதை சிசிடிவி ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தை எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலின் மூலம் அரசியலாக்கப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வருந்தினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,அதிமுகவின் கோட்டையான ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறினார். ஆர்.கே.நகர் தொகுதியில் 6ஆம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறேன். ஒரு இயக்கம் ஒன்றாக இணையும் போது காலக்கெடு நிர்ணயிப்பது சரியாகாது. அணிகள் இணைந்தால் விலகிவிடுவதாக கூறியவர் (தினகரன்), தற்போது என்ன செய்து வருகிறார் என்பதை அனைவரும் அறிவர். 

மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை சீரமைக்கவும், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையில் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் தங்கமணி, உதயக்குமார், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தில் புயலின் காரணமாக 3,750 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதை சீரமைக்க 2,000 மின்சாரத்துறை அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

பொதுமக்கள் நிவாரணப் பணிகளை பெறக் கட்டுப்பாட்டு அறையும், தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடலுக்கு 29 படகில் சென்ற மீனவர்களில் 18 படகுகளில் சென்றவர்கள் கரை திரும்பி விட்டனர். 11 படகில் சென்ற 30 மீனவர்களைக் காப்பாற்ற கடலோர காவல்படை மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை நீரை சேமிக்க 3 ஆண்டுகால திட்டத்தில் ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டு,  இந்தாண்டு ரூ. 350 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.  இதைத்தவிர, குடிபராமத்து பணிகள் மூலமாகவும், மழை நீரை சேமிக்க நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட பாலம் இடிந்தது தொடர்பாக விசாரிக்கப்படும். அதிமுக சார்பில் மாதத்தில் அதிக அளவில் கூட்டங்கள் நடத்தப்படுவது, எதிர்க்கட்சிகளால் குறிப்பாக திமுகவால் தாங்க முடியவில்லை. மேலும், அதிமுக அரசு மீது குற்றம் சொல்ல முடியவில்லை என்பதால் ஸ்டாலின் விரக்தியில் பேசி வருகிறார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...