கோவையில் நாளை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - ஏற்பாடுகள் தீவிரம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாளைக் கோவையில் நடைபெறுவதையொட்டி,  அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். 

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவைப் போற்றும் வகையிலும், அவர் மக்கள் நலனுக்காக ஆற்றிய பணிகள் அவரது வரலாறு ஆகியவை குறித்து இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் மிகச் சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில்,  முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, தொடக்கவிழா கடந்த ஜூன் 30 மதுரை மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவானது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழா  நடைபெறும் மாவட்டங்களில், எம்ஜிஆர் திரைப்படங்கள் மற்றும் அரசியல் மூலம் ஆற்றிய சமூகத்தொண்டு, சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் பற்றியும், பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்திடும் வகையில் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணாக்கர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

மேலும், எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றை விழாவின்போது பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டு வருகின்றன.  எம்ஜிஆர் பற்றிய குறும்படமும், அவர் நடித்த திரைப்படங்களும் கிராமப்புறங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை கொண்ட விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டுள்ளன. 

அந்த வகையில் தமிழகத்தில் 28-வது மாவட்டமாகக் கோவை மாவட்டத்தில் உள்ள வஉசி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எம்ஜிஆர் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, ரூ.691. 69 கோடி மதிப்பிலான 37 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.1328. 95கோடி மதிப்பில் 39 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும், 36,988 பயனாளிகளுக்கு ரூ.118.83 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளனர். 

இவ்விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கவும், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகிக்கவும் உள்ளனர். மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை சிறப்புரை ஆற்றுவார்கள். மேலும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலை வகிப்பார்கள்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரையாற்ற உள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் நன்றியுரையாற்ற உள்ளார். 

பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை எம்ஜிஆர் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும்   நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி   அறிவுரையின் பேரில், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...