தொடர் கனமழையால் முழுக் கொள்ளளவை எட்டும் கோவை அணைகள்

கோவை, டிசம்பர் 02

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், சிறுவாணி, பில்லூர், ஆழியார் அணைகள், அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 

ஒகி புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. 

மாதம்பட்டி, பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கோவையின் நீர் ஆதரமாக உள்ள சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி, 55 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 52.32 அடியாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சிறுவாணி பகுதியில் 26 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. 

இதேபோல, 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு 2,466 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆழியார் அணை 120 அடி உயரம் கொண்டது. தற்போது, பெய்து வரும் கனமழையால், 85.90 அடி உயரம் எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து 883 கனஅடியாக உள்ளது. 

இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை, தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...