கோவையில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் தொடர்ந்து சேதப்பட்டு வருகின்றன துணை முதலமைச்சர் பெயர் : மீண்டும் கிழிக்கப்பட்டது

கோவை, டிசம்பர் 2

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களில் இடம்பெற்றிருந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகிறது. 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான 'கட் அவுட் டுகள்' கோவையின் சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விழாவுக்காக கோவை வரும் அ.தி.மு.க பிரமுகர்களை வரவேற்கும் பொருட்டு அவினாசி சாலையின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் சார்பில் வரவேற்பு பேனர்கள் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவினாசி சாலையில் இருந்து ரேஸ்கோர்ஸ் செல்லும் (ரெட் பீல்ட்ஸ்) சாலை அருகில் வரவேற்பு பேனர் ஒன்றை அ.தி.மு.க.வினர் அமைத்திருந்தனர்.

அந்த பேனரில்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்  வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ. அருண்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 

கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி மர்ம நபர்கள் சிலர் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பெயரை கத்தியால் கிழித்து பேனரை சேதப்படுத்திச் சென்றனர்.

இந்த சூழலில் இன்று மேலும் ஒரு பிளக்ஸ் பேனரில் இருந்த ஓ.பி.எஸ் பெயர் கிழித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

பீளமேடு பகுதியில் இருந்து சிட்ரா செல்லும் சாலையில் அ.தி.மு.க.வினர் அமைத்த பிளக்ஸ் பேனரில் இருந்த துணை முதலமைச்சரின் பெயரை இன்று மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இது போல் ஹோப்ஸ் பகுதியில் வைக்கப்பட்ட சில பேனர்களும் சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. 

தொடர்ந்து, துணை முதலமைச்சரின் பெயர் கிழித்து  சேதப்படுத்தப்படுவது அவரின் ஆதரவாளர்களிடையே பெரும் மனவருத்தத்தை   ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...