எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தும் அதிமுக-வினர் மக்கள் நலனை தவறவிட்டுவிட்டனர்- சீமான்

கோவை, டிசம்பர் 3

புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி தனித் தீவு போலக் காட்சியளிப்பதாகவும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தும் அதிமுக-வினர் மக்கள் நலனை காக்க தவறவிட்டுள்ளனர் என்றும் சீமான் பேட்டியளித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

தற்போது ஏற்பட்ட புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் தனித் தீவு போல் காட்சி அளிக்கிறது. அரசு சார்பில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, மீட்புப் பணிகளும் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையற்ற அதிமுக-வினர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

கோவையில் ரகுபதி என்னும் இளைஞர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. பேனர் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நிற்பதாக அமீர் கூறியது குறித்து நாளை முடிவு செய்வோம். மேலும், அன்புசெழியன் விஷயத்தில் அமீருக்கும்  எங்களுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தேர்தலைப் போல் இந்தத் தேர்தலையும் நடிகர் விஷால் நினைக்கிறார், வரட்டும் பார்க்கலாம். திரைப்படத்துறை பாதுகாப்பு இல்லாத துறையாக இருக்கிறது. வட்டிக்கு பணம் பெற்றுத்தான் இந்தத் துறையில் வேலை பார்க்க வேண்டி இருக்கிறது. எனவே, அரசு இதனை கவனத்தில் கொண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...