அதிக கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சி கட்டணக் கழிப்பிடம்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்

கோவை, டிசம்பர் 4

காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை, காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் கட்டண கழிப்பிடம் குத்தகைதாரர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் சிறுநீர், மலம் கழிக்க ரூ. 1 மற்றும் குளிக்க ரூ. 3 என வசூலிக்க வேண்டும் என அதன் அருகிலேயே அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதனை குத்தகைக்கு எடுத்துள்ள நபரோ மாநகராட்சி நிர்ணயித்துள்ள விலை பட்டியலை ஒரு அட்டையினைக் கொண்டு மறைத்து, அதற்கு மாற்றாக அதிகப்படியான தொகையை வசூலித்து வருகிறார். அதாவது, சிறுநீர் கழிக்க மட்டும் 5 ரூபாய் இங்கு வசூல் செய்யப்படுகிறது.



இதுகுறித்து, அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்த நபரிடம் கேள்வியெழுப்புகையில், "மாதம் 12 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகமா அதனை செலுத்தும். இவ்வாறு அதிகத் தொகை வசூலித்தால் மட்டுமே அதனை செலுத்த முடியும். வேண்டுமென்றால் பயன்படுத்துங்கள், இல்லையென்றால் சாலையோரம் சென்று சிறுநீர் கழித்துக் கொள்ளுங்கள்" என்றார் கடும் கோபத்துடன்.

வாரம் தவறாமல் "அதிக தொகை வசூலித்த கட்டணக் கழிப்பிட குத்தகைதாரர் மீது நடவடிக்கை" என மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...