கோவையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் வடிவமைப்பை மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை, டிசம்பர் 4

கோவை நஞ்சப்பா சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாலத்தின் வடிவமைப்பை மாற்றி அமைத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் பார்க் கேட்டிலிருந்து டெக்ஸ்டூல் பாலம் வரை ரூ.120 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இதனை, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதில், நஞ்சப்பா சாலையிலிருந்து கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, வி.கே.கே.மேனன் சாலை, ஆவாரம்பாளையம் சாலைக்குச் செல்ல வாகன ஓட்டிகள் பாலத்தின் கீழேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதேபோல, கணபதியிலிருந்து காந்திபுரம் வரவும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காந்திபுரம் பகுதிக்கு வர கீழேயே வர வேண்டிய சூழல் உள்ளதால் காந்திபுரம் பகுதியில் எப்போதும் போல போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், பாலத்தின் வடிவமைப்பை மாற்றிப்பதுடன், ரவுண்டானா அமைத்துத் திறக்கப்பட்டுள்ள புதிய பாலத்துடன் இணைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய பாலத்தின் வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மேலும், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் பேருந்து நிலையத்திற்கும் கிராஸ்கட் சாலைக்கு வரக்கூடிய வகையில், தமிழக அரசு முடிவு செய்தபடி சுரங்க நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...