காங்கிரஸ் கட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ராகுல் காந்தி

டிசம்பர் 4

காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் துணைத்தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கட்சியின் தலைவராக, அவர் போட்டியின்றி தேர்வாகிறார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவதால், கட்சியின் நலன் கருதி ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தக் கோரிக்கை தொடர்பாக முதலில் அமைதி காத்து வந்த சோனியா, நாளடைவில் தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் எனத் தீர்மானித்தார். 

இதற்காக, கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். துணைத்தலைவராக இருக்கும் ராகுல்காந்தி வேட்பு மனுதாக்கல் செய்தார். நாளை வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும். வேட்பு மனு வாபஸ் பெறக் கடைசி நாள் டிசம்பர் 11-ந் தேதியாகும். டிசம்பர் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 19 ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 

எந்தப் போட்டியும் இல்லை என்றால் ராகுல் காந்தி டிசம்பர் 11-ந் தேதி காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்படுவார். முன்னதாக ஜன்பாத்தில் உள்ள சோனியாகாந்தி இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஆசி பெற்றார். பின்னர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்தனர். தொடர்ந்து, மாநில தலைவர்கள் வழிமொழிந்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாப், மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோனி ஆகியோர் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்தனர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோசினா கிதவாய், ஷீலா தீட்சித், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...